வெளிநாட்டு மையங்களில் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு நடைபெறாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2020

வெளிநாட்டு மையங்களில் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு நடைபெறாது.

பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு, வெளிநாட்டு மையங்களில் நடைபெறாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐஐடியில் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வு ஜூலை மாதம் நடைபெற இருந்தது. எனினும் கரோனா சூழல் காரணமாகத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது நுழைவுத் தேர்வு செப்டம்பர் 27-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுத் தேர்வை டெல்லியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) நடத்த உள்ளது. இந்நிலையில் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு, வெளிநாட்டு மையங்களில் நடைபெறாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக வெளியான செய்திக் குறிப்பில், ''தற்போதுள்ள கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது வெளிநாட்டுப் பயணம் மற்றும் விசா அனுமதி ஆகியவற்றில் பிரச்சினை உள்ளது. இதனால் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை வெளிநாட்டு மையங்களில் நடத்த வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் தகுதி வாய்ந்த மாணவர்கள், இந்தியாவில் உள்ள தங்களுக்கு வசதியான நகரங்களில் உள்ள மையங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கரோனா தொற்று அச்சம் காரணமாக மருத்துவ, பொறியியல் நுழைவுத் தேர்வுகளைத் தள்ளிவைக்கச் சொல்லி மாணவர்கள் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி