அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கனவு மாணவர் விருது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2020

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கனவு மாணவர் விருது!

காஞ்சிபுரம் அடுத்த அங்கம்பாக்கம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கனவு மாணவர் விருது வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த அங்கம்பாக்கம் அரசுப் பள்ளி மாணவர்கள் , அறிவியல் மற்றும் கிராமியக் கலையிலும் புதுமைகளை படைத்தலிலும் சிறந்து விளங்குகின்றனர். அவர்களில் சிறந்த மாணவர்களான இரா.தருண்பிரசாத் , மு.கலைமதி ஆகியோருக்கு டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில் கனவு மாணவர் - 2020 விருது வழங்கப்பட்டது. கொரோனா பேரிடர் காரணமாக இஸ்ரோ முன் னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை , முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் செயலாளர் பொன்ராஜ் ஆகியோர் தலைமையில் இணையவழியில் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டது அந்த விருதுகளை அறக்கட்டளை நிறுவனர் ஜெயராஜ் நேரடியாக பள்ளிக்கு சென்று வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தணிகை அரசு , அறிவியல் ஆசி ரியர் சேகர் , சீனுவாசன் உள்பட பள்ளி ஆசிரியர்கள் , பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி