கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பள்ளிகள் எப்போது திறக்கும் என்று அறிகுறியும் இல்லை. ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக கடந்த சில நாட்களாக நடைபெற்றது என்றாலும் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய கல்வி அமைச்சக செயலாளர் வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்று தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தகவலால் பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி