ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 7, 2020

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து கற்றல் நடைபெறுவதை உறுதி செய்தல் மற்றும் தெளிவுரைகள் - CEO செயல்முறைகள்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை , அனைத்து வகுப்பு மாணவர்களும் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்பதற்கு ஏதுவாக டிஜிட்டல் முறையில் பாடப்புத்தகங்கள் , வீடியோ பாடங்கள் , கல்வி தொலைக்காட்சி , பயிற்சிதாள் ( Worksheet ) மற்றும் online மதிப்பீடு போன்ற செயல்பாடுகளை ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ‘ வீட்டு பள்ளி ' ( School at Home ) 6T60TM அணுகுமுறையின் மூலம் முதல் XII வகுப்புகளுக்குரிய பாடங்களில் கற்றல் விளைவுகளுக்கேற்ப ( Learning Outcome Based ) ஆசிரியர்களைக் கொண்டு வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. தங்களுடைய வகுப்புக்குரிய பாடங்களை தொழில்நுட்ப வளங்களை பயன்படுத்தி கற்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்த Whatsapp குழுக்கள் அமைத்து செயல்பட வேண்டும். அதற்கான உரிய வழிகாட்டுதலை வழங்கிட அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. பள்ளிகளில் வகுப்பு வாரியாக அமைக்கப்பட்டுள்ள இந்த Whatsapp குழுக்களில் e-learn.tnschools.gov.in மற்றும் TNTP- ல் உள்ள பாடவாரியான வளங்களை பகிர்ந்திடவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.





1 comment:

  1. ஏற்கனவே இதே ஈரோடு மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ஊடகங்கலில் ஆசிரியர்கள் பேட்டி கொடுக்க கூடாது என்று முதன்மை கல்வி அலுவலர் கையொப்பம் போடாத சுற்றறிக்கை போட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒருவர் கேட்ட உடன் முதன்மை கல்வி அலுவலர் கையொப்பம் போடாத சுற்றறிக்கை ஈமெயில் மூலம் வந்தது பற்றி பதில் சொல்ல முடியாது என்று ஈரோடு மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் பசுபதி அவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் சொல்ல மறுத்து விட்டார்..

    இந்த நிலையில் மீண்டும் முதன்மை கல்வி அலுவலர் கையொப்பம் போடாத சுற்றறிக்கை இப்போது வந்து விட்டது...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி