10, 12-ம் வகுப்பில் முதலிடம் பெற்றோருக்கு கார் பரிசு: எந்த மாநில அரசு தெரியுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2020

10, 12-ம் வகுப்பில் முதலிடம் பெற்றோருக்கு கார் பரிசு: எந்த மாநில அரசு தெரியுமா?

 


10, 12-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஜார்க்கண்ட் கல்வித்துறை அமைச்சர் ஜெகர்நாத் மேத்தோ காரைப் பரிசாக வழங்கினார்.

ஜார்க்கண்ட் கல்வி கவுன்சில் சார்பில் அம்மாநிலத்தில் 10, 12-ம் வகுப்புத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகின. அப்போது மாநிலக் கல்வித்துறை அமைச்சர் ஜெகர்நாத் மேத்தோ, பொதுத் தேர்வில் முதலிடம் பிடிப்போருக்குக் காரைப் பரிசாக வழங்குவதாக உறுதியளித்ததாகத் தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில், தற்போது அமைச்சர் ஜெகர்நாத் மேத்தோ 10, 12-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்குக் காரைப் பரிசாக வழங்கியுள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிறுவனரான வினோத் பிஹாரி மேத்தோ பிறந்த நாளில் கார் சாவிகள் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஜெகர்நாத் மேத்தோ, ''தேர்வில் முதலிடம் பெற்ற மனிஷ் குமார் மற்றும் அமித் குமாருக்கு மாருதி ஆல்ட்டோ கார்களைப் பரிசாக வழங்கினேன்'' என்று தெரிவித்துள்ளார்.

10-ம் வகுப்பு மட்டுமே முடித்த அமைச்சர் ஜெகர்நாத் மேத்தோ, அண்மையில் 11-ம் வகுப்பில் சேர்ந்ததும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி