கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் 20 சதவீதம் இடங்களை அதிகரிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்றால் இந்தாண்டு கலை, அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் கலை, அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கலை அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை அதிகரிக்க தமிழக கல்லூரி கல்வி இயக்குநர் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி கலை பிரிவுகளில் 20 சதவீத இடத்தையும், அறிவியல் பிரிவுகளில் ஆய்வக வசதிக்கு ஏற்ப 20 சதவீத இடங்களை அதிகரிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த சம்பந்தட்ட பல்கலைக்கழங்களில் அனுமதி பெற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
1998 ஆம் ஆண்டு கால கட்டத்தில் ஒரு வகுப்பில் 25 மாணவர்கள் மட்டுமே கல்லூரிகளில் சேர்க்கப்பட்டது.ஆனால் இப்போது ஒரு வகுப்பில் 40 முதல் 50 மாணவர்கள் சேர்க்கபடுகிறது.எப்படி கல்வி தரம் உயரும். இந்த லட்சணத்தில் 80% ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே இருக்கிறது.அதாவது சுமார் 7000 ஆசிரியர்கள் பணியிடங்களில் 6000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே இருக்கிறது. மாணவர்களை சேர்த்தால் மட்டும் போதாது போதுமான அளவில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
ReplyDeleteVery good decision most of the parents expect Govt college
ReplyDelete