வனத் துறை தேர்வு பணி மீண்டும் ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2020

வனத் துறை தேர்வு பணி மீண்டும் ஒத்திவைப்பு

வனக் காப்பாளர் தேர்வுக்கு பிந்தைய நடவடிக்கைகள், மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக, வனத் துறை அறிவித்துள்ளது.


தமிழகத்தில், வனக் காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான, 'ஆன்லைன்' தேர்வு, மார்ச், 8ல் நடந்தது. இத்தேர்வுக்கு பிந்தைய சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் திறன் தேர்வுகளை, ஏப்ரல், மே மாதங்களில் நடத்த திட்டமிட்டது.ஊரடங்கு காரணமாக, இந்நடவடிக்கைகள் ஒத்திவைக்கப் பட்டன. 


கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக, இப்பணிகளை துவங்குவது குறித்து, வனத் துறை ஆராய்ந்தது. தற்போதைய சூழல், இப்பணிகளை மேற்கொள்ள உகந்ததாக இருக்காது என, தெரிய வந்தது.இதுதொடர்பாக, வனச் சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்ட அறிவிப்பு:கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் வைத்து, தேர்வுக்கு பிந்தைய நடவடிக்கைகள், மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகின்றன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி