AICTE மின்னஞ்சல் போலியானது - சூரப்பா தகவல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 8, 2020

AICTE மின்னஞ்சல் போலியானது - சூரப்பா தகவல்.

 

அரியர்ஸ் விவகாரம் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) அனுப்பியதாக ஊடகங்களில் வெளியான மின்னஞ்சல் போலியானது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

தமது தரப்பில் இருந்து எந்த மின்னஞ்சலையும் வெளியிடவில்லை என அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா விளக்கமளித்துள்ளார். மின்னஞ்சலை பொதுவெளியில் வெளியிட வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றும் துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மின்னஞ்சல் விவகாரம் குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவிடம் விளக்கம் கேட்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நியூஸ் 7 தமிழுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மின்னஞ்சல் விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாகவும், துணைவேந்தர் சூரப்பாவிடம் விளக்கம் கேட்ட பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில் (AICTE)  இருந்து அரசுக்கு எந்த மின்னஞ்சலும் வரவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி