அரசு கல்லுாரிகளில் சட்டப் படிப்பு இன்று விண்ணப்பம் வினியோகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2020

அரசு கல்லுாரிகளில் சட்டப் படிப்பு இன்று விண்ணப்பம் வினியோகம்

 


மூன்று ஆண்டுகளுக்கான, எல்.எல்.பி., சட்டப்படிப்புக்கு இன்று முதல், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை பதிவாளர், ரஞ்சித் உம்மன் ஆப்ரஹாம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:அம்பேத்கர் சட்ட பல்கலையில் உள்ள, சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் பல்கலையின் இணைப்பில் உள்ள அரசு சட்ட கல்லுாரிகளில், மூன்றாண்டு, எல்.எல்.பி., மற்றும் இரண்டாண்டு, எல்.எல்.எம்., படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.எல்.எல்.பி.,க்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்; அக்., 28க்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.


எல்.எல்.எம்., சட்ட மேற்படிப்புக்கு, வரும், 7ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும்; பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நவம்பர், 4க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.எல்.எல்.பி.,யில் சேர, ஏதாவது ஒரு பாடப்பிரிவில், இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எல்.எல்.பி., ஹானர்ஸ் படிப்பில், சீர்மிகு சட்டப்பள்ளியில் சேர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், குறைந்தபட்சம், 55 சதவீதம்; மற்றவர்கள், 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.இணைப்பு கல்லுாரிகளில் படிக்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் குறைந்தபட்சம், 40 சதவீதமும், மற்றவர்கள், 45 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.சட்ட பல்கலையின், www.tndalu.ac.in என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். சம்பந்தப்பட்ட கல்லுாரிகளில் நேரடியாகவும் பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. https://www.youtube.com/watch?v=BXk7dQOqlKM&feature=youtu.be

    ReplyDelete
  2. இந்த ஆட்சி அமைந்தாலே பணி நியமன தடைச்சட்டம் கொண்டு வந்து பணியிடங்களை நிரப்புவதற்கே தடைச்சட்டம் கொண்டுவந்து விடுவார்கள். ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியில் இருந்த போது இந்த நிலை ஏற்பட்டு பல இளைஞர்களின் அரசுப்பணி கனவைத் தகர்த்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக பணி நியமனத்தடைச்சட்டம் கொண்டு வர வில்லை. ஆனால் கொத்தடிமை நிலைக்கு 5000 சம்பளம், 7000 சம்பளம் என்று பல்லாயிரக்கணக்கானோரை கொத்தடிமைகளாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவத்துறை, காவல்துறை, கல்வித்துறை என பல துறைகளிலும் இதே நிலை தான். இதை யாராலும் மறுக்க முடியாது. அரசுப் பணி என்ற கனவு நிறைவேறுவதே ஏழைகளுக்கு வாழ்வளிக்கும். அந்த கனவை தகர்த்தால்?????? ஆனால் நாம் பார்க்கும் வேலைவாய்ப்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு எப்படி கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சாதாரண தொகுப்பூதிய வேலைகளுக்கு பல லகரங்களை தட்சணையாக பேசிவருகிறார்கள். வழங்கி வருகிறார்கள். இது உங்கள் அருகில் இருப்பவர்களை விசாரித்தால் தெரியும். அதே போல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சொற்ப பணியிடங்களை அறிவிப்பதும் அதில் பல ஏற்றுக் கொள்ள முடியாத மாற்றங்களைச் செய்வதும் பின் அதற்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருடக்கணக்கில் இழுத்தடிப்பதும் நடந்து வருகின்றன. ஏன் இப்படி இந்த அரசு ஏழைகளுக்கு கிடைக்கும் அரசுப்பணியை தடுக்கிறது???????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி