நீட் தேர்வு: பள்ளிக்கல்வி இயக்குநருக்கு முதன்மை செயலர் அறிவுரை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2020

நீட் தேர்வு: பள்ளிக்கல்வி இயக்குநருக்கு முதன்மை செயலர் அறிவுரை


வரும், 13ம் தேதி நடக்க உள்ள, 'நீட்' தேர்வுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு, முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார். 


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்பில்சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, 13ம் தேதி, நாடு முழுதும் நடக்கிறது. இதில், 20 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர். இந்த தேர்வுக்கான தேர்வு மையங்கள் நிர்ணயிக்கப் பட்டு, அதன் பட்டியல், தமிழக பள்ளி கல்வி துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வு மையங்களில், நீட் தேர்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பனுக்கு, பள்ளி கல்வி முதன்மை செயலர், தீரஜ்குமார் உத்தரவிட்டு உள்ளார். 


மேலும், தமிழக அரசு பள்ளிகளில் படித்து, நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர் களுக்கும், நீட் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை தெரிவித்து, உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி