யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2020

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

 

யோகா மற்றும் இயற்கை மருததுவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, சுயநிதி யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் 2020-2021ம் கல்வி ஆண்டில் பிஎன்ஒய்எஸ் மருத்துவ பட்டப் படிப்பில் மாணவர்களை சேர்க்க ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று  அறிவிக்கப்பட்டது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி நாள் ஆகஸ்ட் 28 மற்றும் 31ம் தேதியில் இருந்து செப்டம்பர் 12ம் தேதி மற்றும் 15ம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பை செப்டம்பர் 12ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் கூடிய விண்ணப்ப படிவங்களை தபால் மற்றும் கூரிய சேவை மூலம் பெறவோ, நேரில் சமர்ப்பிக்கவோ கால நீட்டிப்பு செப்டம்பர் 15ம் தேதி வரை செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி