இறுதி செமஸ்டருக்கு முன் முதுகலை மாணவர் சேர்க்கை நடத்தினால் நடவடிக்கை!. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2020

இறுதி செமஸ்டருக்கு முன் முதுகலை மாணவர் சேர்க்கை நடத்தினால் நடவடிக்கை!.


 இறுதி செமஸ்டருக்கு முன் முதுகலை மாணவர் சேர்க்கை நடத்தினால் நடவடிக்கை!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதி செமஸ்டர் தேர்வுகள் மட்டும் நடத்தப்படவுள்ளன.


இந்த நிலையில், இளநிலைப் படிப்புகளின் ஐந்தாவது செமஸ்டர் தேர்வை கணக்கில் கொண்டு முதுகலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்திவருவதாக புகார் எழுந்துள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வு முடிவதற்கு முன்பே, முதுகலை மாணவர் சேர்க்கை நடத்தினால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரிக் கல்வி இயக்குனர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்புப் படித்து வரும் மாணவர்களுக்கு இன்னும் இறுதியாண்டு இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்படவில்லை. எனவே முதுகலை மாணவர் சேர்க்கை பற்றி கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி