DEE - ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 6, 2020

DEE - ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க இயக்குநர் உத்தரவு.



தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி / அரசு / நகராட்சி / தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்கக்கோரும் கோரிக்கை மனுக்கள் பெறப்படின் முகாம் நடத்தி அக்கோரிக்கை மனுக்களை பரிசீலித்து விதிகளின்படி சரியாக உள்ளதா என்பதனை உறுதிசெய்து உரிய ஆணையினை காலதாமதம் ஏற்படாமல் விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேலும், மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தில் தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்கிய விவரங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இப்பொருள் சார்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தினை ஒவ்வொரு மாதமும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அறிக்கையாக அனுப்பவும் என அறிவுறுத்தப்படுகிறது.


 - தொடக்கக் கல்வி இயக்குநர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி