கட்டாயக்கல்வி உரிமை சட் டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25% இடங் களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல் லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவை இல்லை. அதன்படி மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் ஒரு லட்சத்து 15,763 இடங்கள் உள்ளன.
நடப்பு ஆண்டு சேர்க்கைக் கான விண்ணப்பப் பதிவு rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக கடந்த ஆக. 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி 61 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள் ளனர்.
இந்நிலையில் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப் பித்தவர்களின் ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தேர் வானவர்களின் பெயர்ப் பட்டியல் அக். 3-ம் தேதி வெளியிடப்படும். அதேநேரம், நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில், குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர் என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் தெரி வித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி