தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்திக் குறிப்பு செய்திக் குறிப்பு எண் 26 நாள் : 15.09.2020 | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 176 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை எண் 25/2019 வெளியிடப்பட்டு முதனிலை எழுத்துத் தேர்வு 24.11.2019 அன்று நடைபெற்றது 28.03.2020 மற்றும் 29.03.2020 ஆகிய நாட்களில் நடைபெறுவதாக இருந்த முதன்மை எழுத்துத் தேர்வு கொரொனா வைரஸ் பரவல் காரணமாகவும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட மேற்படி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு , 17.10.2020 மற்றும் 18.10.2020 ஆகிய நாட்களில் சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும் இதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தேர்வாணைய இணைய தளத்தில் விரைவில் வெளியிடப்படும்.
தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்
Special teacher PET drawing posting podunga sir
ReplyDelete