10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி இன்று தொடங்கியது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு, இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் மற்றும் வருகைப் பதிவேட்டி அடிப்படையில், மாணவர்களுக்குத் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. அந்த மாணவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிலையில், மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டு வருகின்றது. பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள பள்ளி அல்லது தேர்வு மையத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
தேர்வர்களும் பெற்றோர்களும் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
முன்னதாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 14-ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தனித்தேர்வு எப்போது நடைபெற்ற தேர்வு க்கு சான்றிதழ் வழங்க படுகிறது என்று சொல்லுங்க சார்
ReplyDelete