2017 TO 2020 - கல்வி உதவித்தொகை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2020

2017 TO 2020 - கல்வி உதவித்தொகை அறிவிப்பு.

 


தமிழக அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கல்விக்கட்டணம் செலுத்தி கீழ்கண்ட பட்டியல் வகைபாட்டின் அடிப்படையில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு / தொழில்நுட்ப பட்டயப் படிப்ப பயிலும் மாணவ , மாணவியர்களிடமிருந்து கீழ்கண்ட அறக்கட்டளைகள் மூலமாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்காக கீழ்கண்ட பிரிவினைச் சார்ந்த நபர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.


விண்ணப்பதாரரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ .2,00,000 - ( ரூபாய் இரண்டு லட்சம் மட்டும் ) மிகப்படாது இருத்தல் வேண்டும். விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து காலங்களையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது விண்ணப்பபடிவம் பெற ஒரு முழு வெள்ளைத்தாளில் மாணவ , மாணவியர் தங்கள் பெயர் , பயிலும் / பயின்ற வருடம் , கல்லூரியின் பெயர் , ஜாதியின் விவரம் அடங்கிய வேண்டுகோள் மனுவுடன் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.


 தபாலில் பெற ரூபாய் 10 -க்கான அஞ்சல் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட நீள உறை இணைத்து தபால் மூலம் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைத்தால் விண்ணப்பம் அனுப்பி வைக்கப்படும் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறும் கடைசி நாள் 30.10.2020 மாலை 5.00 மணி . குறைபாடுள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை பெற தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அதிகமான மாணவர்கள் மூன்று கல்வி ஆண்டுகளுக்காக உதவித்தொகைக்கு தேர்வாகும் நிலையில் மற்ற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏதேனும் ஒரு கல்வி ஆண்டிற்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதைப்பொறுத்து தமிழ்நாடு அரசு பேராட்சியர் மற்றும் பொறுப்பு சொத்தாட்சியா முடிவே இறுதியாகும்.


Scholarship Application 2020 - Download here...



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி