நாடு முழுவதுமுள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியா்களுக்கு ரூ.3,737 கோடி ஊக்கத்தொகை (போனஸ்) வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பண்டிகை காலம் நெருங்குhவதையொட்டி இந்த ஊக்கத்தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாட்டிலுள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியா்களுக்கு பணித்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகையையும், பொதுவான ஊக்கத்தொகையையும் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்படி ஊழியா்களுக்கு ரூ.3,737 கோடியானது ஊக்கத்தொகையாக அளிக்கப்படவுள்ளது.
விஜயதசமி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை மத்திய அரசு ஊழியா்கள் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு இந்த ஊக்கத்தொகை வழிவகுக்கும். மேலும், நடுத்தர குடும்பத்தைச் சோ்ந்த ஊழியா்கள் அந்த ஊக்கத்தொகையைக் கொண்டு சந்தையில் பொருள்களை வாங்குவா். அது பொருள்களுக்கான தேவையை அதிகரித்து, பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும்.
இன்னும் ஒரு வார காலத்தில் ஊழியா்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றாா் பிரகாஷ் ஜாவடேகா்.
ஊக்கத்தொகை விவரங்கள்: மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘முந்தைய நிதியாண்டுகளில் மத்திய அரசு ஊழியா்கள் பணியாற்றிய விதத்தின் அடிப்படையிலான ஊக்கத்தொகை, துா்கை பூஜை விழாவுக்கு முன்பாக வழங்கப்படுவது வழக்கம். ஊழியா்களின் பணித்திறன் அடிப்படையில் ரூ.2,791 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படவுள்ளது.
இதன் மூலமாக ரயில்வே ஊழியா்கள், தபால் ஊழியா்கள் உள்ளிட்ட 16.97 லட்சம் போ் பலனடைவா். பொதுவான ஊக்கத்தொகையாக 13.70 லட்சம் ஊழியா்களுக்கு ரூ.946 கோடி வழங்கப்படவுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீா் பஞ்சாயத்து சட்டம்: அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் குறித்து அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறுகையில், ‘‘ஜம்மு-காஷ்மீா் பஞ்சாயத்து சட்டம், 1989-ஐ அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலமாக, ஜம்மு-காஷ்மீரில் மக்களாட்சியின் அடிப்படையாக விளங்கும் உள்ளாட்சி அமைப்புகளை ஏற்படுத்த முடியும்.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ரத்து செய்யப்படாத வரை, அங்கு உள்ளாட்சி அமைப்புகள் செயல்படவில்லை. காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படும் என்று பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் உறுதி அளித்திருந்தனா். அந்த வாக்குறுதி தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலமாக, ஊரக, மண்டல, மாவட்ட அளவிலான உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை ஜம்மு-காஷ்மீா் மக்கள் தோ்ந்தெடுக்க முடியும். அங்கு உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்’’ என்றாா்.
ஆப்பிள் கொள்முதல்: நடப்பு 2020-21-க்கான வேளாண் பருவத்தில் 12 லட்சம் டன் ஆப்பிளை ஜம்மு-காஷ்மீரிலிருந்து கொள்முதல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கடந்த 2019-20-க்கான வேளாண் பருவத்தைப் போலவே நடப்பு பருவத்திலும் ஜம்மு-காஷ்மீரிலிருந்து ஆப்பிள் கொள்முதல் செய்யப்படும். இதற்காக, ரூ.2,500 கோடியை செலவிட தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்புக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆப்பிள் கொள்முதலில் இழப்பு ஏற்பட்டால், அத்தொகையை மத்திய அரசும் ஜம்மு-காஷ்மீா் நிா்வாகமும் பகிா்ந்து கொள்ளும். இத்திட்டத்தின் வாயிலாக சுமாா் 12 லட்சம் டன் ஆப்பிள் கொள்முதல் செய்யப்படவுள்ளது. அதற்கான தொகையானது ஜம்மு-காஷ்மீா் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா-மலேசியா ஒப்பந்தம்: இந்திய கணக்குத் தணிக்கையாளா் மையம்-மலேசியா கணக்குத் தணிக்கையாளா் மையம் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, ஒரு மையத்தைச் சோ்ந்த திறன் மிகுந்த கணக்குத் தணிக்கையாளரை மற்றொரு மையத்தில் பணியாற்றச் செய்ய முடியும். அதேபோல், கணக்குகளைத் தணிக்கை செய்வதில் பப்புவா நியூ கினியாவுடன் இணைந்து செயல்படுவதற்காக கையெழுத்தான புரிந்துணா்வு ஒப்பந்தத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தியா-நைஜீரியா ஒப்பந்தம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கும் (இஸ்ரோ) நைஜீரியாவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இதன் மூலமாக, செயற்கைக்கோள் தொடா்பு, விண்வெளி அறிவியல், புதிய கோள்களைக் கண்டறிதல் உள்ளிட்டவற்றில் இரு நாடுகளும் ஒரு
*தனியார் கல்வி நிறுவன ஆசிரியன் கொரானா குமுறல்கள்*
ReplyDeleteமார்ச் 2020 முதல் இந்த மாதம் முடிய வரை அதாவது கடந்த 8 மாதங்களாக குறை சம்பளம் மற்றும் சம்பளமே இல்லாமல் அவதிப்படும் ஒரே சமூகம் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் சமூகம் மட்டுமே....
எட்டு மாதங்களாக வாங்கும் 8000 - 15000 சம்பளத்தில் 20% அல்லது 30 சதவீதத்தில்
சம்பளத்தோடு அல்லது சம்பளமே இல்லாமல் மிகவும் கடினப்பட்டு வேதனைவோடு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். தனியார் கல்வி ஆசிரியர் பெருமக்கள்.....
இதைப் பற்றி பேசவோ??? ஆலோசிக்கவும்.
எவருக்கும் திராணி இல்லை....
மற்ற அனைத்து துறைகளும்
சாதாரண சூழ்நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன...
தனியார் கல்வி ஆசிரியர்கள்
தின கூலி வேலை,
தேங்காய்,காளான் விற்க,
பஜ்ஜி கடை,
காய்கறி கடை வைத்தும், இரவு நேர வாட்ச்மேன் வேலை, கம்ப்யூட்டர் சென்டர்களில் ஜெராக்ஸ் போட
இப்படி பல்வேறு வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி அதுவும் சரியாக இல்லாமல் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.
ஆசிரியர் பணி அறப்பணி,
இன்று
மறுவி
ஆசிரியர் பணி தெரு பணியாகி உள்ளது
ஆனால் நிகழ் அலை நேரடி வகுப்புகள் அதாவது ஆன்லைன் வகுப்புகள் எனக்கூறி மாணவர்களிடம் சரியான கல்வி கட்டணத்தை பெற்று வருகின்றனர்...
அனைத்தும் சரியாகவே நடந்து வருகிறது தனியார் ஆசிரியனின் சம்பளத்தை தவிர...
வங்கிகளில் பர்சனல் லோன் அல்லது வேறு கடனும் பெற்றிருப்பின் அவர்கள் தவணை செப்டம்பர் மாதத்திலிருந்து கட்ட உந்தப்பட்டு உள்ளனர்...
ஏன் இந்த தனியார் ஆசிரியர் தொழிலுக்கு வந்தோம் ????
என நித்தமும் மன வேதனையுடன் உள்ளனர்.....
கொரானா பாதிப்பை விட இந்த பாதிப்பு அவர்களை மட்டுமல்ல அவர்களை சார்ந்த குடும்பத்தையும் பெரும் பாதிப்படைந்துள்ளனர்....
தனியார் கல்வி ஆசிரியர் நிலை நாதியற்ற நிலையாக உள்ளது....
அட்மிஷன் சேர்க்கை,
கல்வி கட்டண வசூல், மாணவர்களுக்கு பாடம் கற்பித்தல்,
வருகைப் பதிவை தக்கவைத்தல்,
மாணவர் வருகை குறைந்தால் அதற்கு சரியான நடவடிக்கை எடுத்தல்,
ஒழுக்க நெறி முறைகளை கற்றுக் கொடுத்தல்,
உணவு இடைவேளைகளில் கூட ஒழுக்க கண்காணிப்பாளராக இருத்தல்,
நிர்வாகம் , மாணவர்கள் மற்றும் பெற்றோர் இவர்களுக்கு ஒரு ஊடகமாக இருந்து சமநிலையில் செயல்படுதல்,
ஒழுங்கு படுத்தும் விதமாக மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்தல்,
தேர்வில் மதிப்பெண் குறைந்தால் அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துதல்,
விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்காக சிறப்பு வகுப்புகள்,
படிப்பில் கவனக் குறைவாக உள்ள மாணவர்களுக்கு மாலை சிறப்பு வகுப்புகள்...
இவ்வாறு கத்தி கத்தி ஓடாக உழைத்து
தனியார் பள்ளி ஆசிரியர்கள்.
காலை7 -8 மணி
இரவு 5-10 மணி வரை தினமும் தனி வகுப்புகள் என
நிர்வாகத்திற்காக 100 என்ற சதவீதத்தை நோக்கி ஓடி....
மன அழுத்தத்தில்.....
ஒட்டு மொத்த மாணவர்களின் வளர்ச்சிக்காக மேம்பாட்டிற்காக உழைத்த தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு இன்று சரியான கூலிகள் இல்லாத, சம்பளம் இல்லாத ,
பிச்சை எடுக்காது குறைகளுடன்.......
அரசாங்கமும் இதுவரையில் தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் கொடுக்க எந்த ஒரு ஆணையும்,
வாதமும் செய்யவில்லை......
*தனியார் ஆசிரியன்*
*ஒரு நாதியற்றவன்*
*பாவப்பட்டவன்*இந்த செய்தியை நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள் பார்க்கும் வரை அனைவரும் பகிரவும், ஆசிரியர் மீது பற்றுள்ள அனைவரும் இச்செய்தியை பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்