புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள்.. தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை. பொறியியல் பட்டதாரிகள் தான் உருவாகின்றனர் : நீதிபதிகள் காரசார கருத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2020

புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள்.. தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை. பொறியியல் பட்டதாரிகள் தான் உருவாகின்றனர் : நீதிபதிகள் காரசார கருத்து



 தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளதற்கு யார் காரணம் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எழுப்பியுள்ளது. திருச்சி கிருஷ்ணசமுத்திரத்தைச் சேர்ந்த கார்த்திக் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்  மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கு முறையான ஊதியம் இல்லை என்றும் கொரோனா காலத்தில் உரிய ஊதியம் வழங்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. 


இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவ்வளவு பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி தர அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தான் காரணமா ?. மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுவதற்கு அனுமதி வழங்கியவர்கள் தான் காரணம்.  இது போன்ற பிரச்சனைகளை களைய தேவைகேற்ப கல்லூரிகளை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் பொறியாளர்கள் உருவாவதில்லை. பொறியியல் பட்டதாரிகள் தான் உருவாகின்றனர். தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கத்தை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைக்கிறோம், என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி