ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கள்ளக்குறிச்சி மாவட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் , காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்பிட சம்பந்தப்பட்ட தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி ) -ஆல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . ஊராட்சி செயலர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் , ஊராட்சி செயலர் காலிப்பணியிட விபரம் , இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை இம்மாவட்டத்தின் www.kallakurichi.nic.in இணைய தளத்தில் இடம்பெற்றுள்ளது . இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்களை 29.10.2020 தேதி முதல் , மேற்படி இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . மேலும் விண்ணப்பங்களை நேரடியாக தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் பதிவு அஞ்சல் மூலமாகவும் நேரடியாகவும் 29.10.2020 முதல் 09.11.2020 தேதி வரை அலுவலக வேலை நேரத்தில் தொடர்புடைய தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிராம ஊராட்சி ) அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளப்படும் . தனி அலுவலர்கள் / வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ( கிராம ஊராட்சி ) கள்ளக்குறிச்சி மாவட்டம் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி