புதிய கல்விக் கொள்கை குறித்து இணையவழி கலந்துரையாடல்: கருத்துகளை தெரிவிக்க யுஜிசி அழைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 3, 2020

புதிய கல்விக் கொள்கை குறித்து இணையவழி கலந்துரையாடல்: கருத்துகளை தெரிவிக்க யுஜிசி அழைப்பு

 

புதிய கல்விக் கொள்கை குறித்த இணையவழி கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை (அக்.4) வரை நடைபெறவுள்ளதாக யுஜிசி தெரி வித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர்ரஜ்னிஷ் ஜெயின், அனைத்துபல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


அறிக்கை தயாரிக்க திட்டம்

புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, அதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து பல்வேறு தரப்பினருடன் மத்திய அரசு சார்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கல்விக்கொள்கையின் முக்கிய அம்சங்களை ஒருங்கிணைத்து அறிக்கை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கல்வியாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் பரிந்துரைகளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது.

நாளை கடைசி நாள்

இதுதவிர கல்விக் கொள்கையை செயல்படுத்துதல் தொடர்பான இணையவழியிலான கலந்துரையாடல் (https://innovateindia.mygov.in/nep2020-citizen/) நேற்று முன்தினம் தொடங்கியது. இது நாளை (அக்.4) வரை நேரலையாக நடைபெறுகிறது.

இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களும் பெரிய அளவில் விளம்பரம் செய்து கல்வியாளர்களின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி