ஆசிரியர்களுக்கான நிஷ்டா பயிற்சி திடீர் ரத்து! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 17, 2020

ஆசிரியர்களுக்கான நிஷ்டா பயிற்சி திடீர் ரத்து!



ஆசிரியர்கள் தங்களது கற்பிக்கும் திறனை மேம்படுத்தவும் , கற்றல் மற்றும் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளை தெரிந்து கொள்ளும் வகையிலும் ஒவ்வொரு ஆண் டும் அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணியிடைப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் , நடப்பாண்டில் 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை கையாளும் அரசு பள்ளி ஆசிரியர்க ளுக்குமத்திய அரசின்மனிதவள மேம்பாட்டு துறையின் சார்பில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மூலம் நிஷ்டா எனும் ஒருங்கி ணைந்த பயிற்சி முகாம் நேற்று ( 16 ம் தேதி ) முதல் நடைபெற இருந்தது. 


இதற்காக , ஒவ்வொரு பள்ளியிலும் 5 பாட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு , பெயர் பட்டியல் மாவட்ட கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பயிற்சி தொடங்க இருந்த நிலையில் நிஷ்டா பயிற்சி முகாம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் மற்றும் மீண்டும் எப்போது பயிற்சி நடைபெறும் என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி