பள்ளி மாணவர்கள் பற்றிய விவரங்களை ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்து, முறையாக பராமரிக்குமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் விவரம் ‘எமிஸ்’ வலைதளம் வழியாகவே கையாளப்பட்டு வருகின்றன. ஆனால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், மாணவர் விவரங்களை ‘எமிஸ்’தளத்தில் முறையாக பதிவேற்றம் செய்வதில்லை என்று கூறப்படுகிறது.
இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘பள்ளியில் இடைநின்றவர்கள், இறப்பு மற்றும் மாற்றுச் சான்றிதழ்பெற்று விலகிய மாணவர்களின் விவரங்கள் ‘எமிஸ்’ தளத்தில் இருந்து உடனுக்குடன் நீக்கப்படவேண்டும். பெரும்பாலான பள்ளிகள் அவ்வாறு செய்யாததால் கடந்த ஆண்டு பல்வேறுகுழப்பங்கள் ஏற்பட்டன. அதைதவிர்க்க, ‘எமிஸ்’ தளத்தில் மாணவர் விவரங்களை முறையாகபராமரிக்க அறிவுறுத்தியுள் ளோம்.
‘எமிஸ்’ தள செயல்பாடுகளை மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி