மருத்துவ படிப்புகள் - விண்ணப்பிக்க 12 ம் தேதி கடைசி நாள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2020

மருத்துவ படிப்புகள் - விண்ணப்பிக்க 12 ம் தேதி கடைசி நாள்!


 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அந்த மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்து இருந்தது.


அதன்படி ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 28 ஆயிரத்து 801 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்து இருப்பதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்து இருக்கிறது.

அதில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 19 ஆயிரத்து 157 விண்ணப்பங்களும், தனியார் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9 ஆயிரத்து 644 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. அவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9 ஆயிரத்து 492 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3 ஆயிரத்து 804 பேரும் முழுமையாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு வருகிற 12-ந் தேதி கடைசிநாள் ஆகும். அதன் தொடர்ச்சியாக வருகிற 16-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதனை தொடர்ந்து நடைபெற இருக்கும் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை மருத்துவ கல்வி இயக்ககம் நாளை(திங்கட்கிழமை) வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி