நவ.16-ல் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்ய பள்ளிகளில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் பெற்றோர் பங்கேற்க அழைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2020

நவ.16-ல் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்ய பள்ளிகளில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் பெற்றோர் பங்கேற்க அழைப்பு.

 


கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து, படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டு வந்தன. வரும் 16-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


ஆனால், கரோனா 2-வது அலை மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருப் பதால், பள்ளி, கல்லூரிகள் திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இதனை பரிசீலித்த தமிழக அரசு, பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துக்களை கேட்க முடிவு செய்தது. அதன்படி இன்று பள்ளி களில் பெற்றோர் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.


இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது:


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 319 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்காக பள்ளிகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு பெற்றோர் முககவசம் அணிந்து வர வேண்டும். பள்ளி வளாகத்தில் கிருமிநாசினியும் வைக்கப் பட்டுள்ளது. அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். கூட்டத்தில் பங்கேற்கும் பெற்றோர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்.


கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகளவில் பெற்றோர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக் களை தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், மக்களின் கருத்தை முழுமையாக அறிய வாய்ப்பாக இருக்கும். எனவே, 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோர் தவறாமல் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு சென்று வரும் 16-ம் தேதி பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றார்.

3 comments:

  1. All the best for give truth ful support. All parents like for school reopen only.and student also like to school reopen only.but some chep follows only like not open school.so give support to school reopen friends.

    ReplyDelete
  2. This meting arrangement for Sunday is right but today all parents gos to warious jobs

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி