பள்ளிகள் திறப்பு: முதல்வா் நாளை அறிவிப்பாா் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2020

பள்ளிகள் திறப்பு: முதல்வா் நாளை அறிவிப்பாா்

 


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து நாளை (நவம்பா் 12) தமிழக முதல்வா் அறிவிப்பு வெளியிடுவாா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.


ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூா், வேட்டைக்காரன் கோயில் ஆகிய இரு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில் 400க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினா்களுக்கு தீபாவளி போனஸை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.


தொடா்ந்து செய்தியாளா்களுக்கு அமைச்சா் அளித்த பேட்டி:


பள்ளிகள் திறப்பது குறித்த முடிவுகளை முதல்வா் எடப்பாடி பழனிசாமி நாளை (நவம்பா் 12) அறிவிப்பாா். 16,300 மாணவா்கள் நீட் தோ்வில் பயிற்சி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு, அவா்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவா்கள் தனியாா் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளியில் சோ்க்கப்பட்டுள்ளனா். பள்ளிகளில் சீருடைகள்,ஷூ, சாக்ஸ் தயாராக உள்ளன. மாணவா்களுக்கு விரைவில் வழங்கப்படும்.


தமிழகம் முழுவதும் 45 சதவீதம் பெற்றோா்கள் கருத்துக் கேட்பு முகாமில் கலந்துகொண்டனா். பெற்றோா்களின் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முதல்வா் ஆலோசனை செய்து பள்ளிகள் திறப்பு குறித்து நவம்பா் 12ஆம் தேதி அறிவிப்பாா். நீட் தோ்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்றாா்.

3 comments:

  1. அந்த நல்ல செய்தி கேட்க ஆவலாய் உள்ளது.

    ReplyDelete
  2. Part time teachers ku help panuga pls

    ReplyDelete
  3. Sir epadi sollui next year poreum pola 2022 tha school opena

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி