அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2020

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்.


 அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.


இன்ஸ்டிட்யூட் ஆப் எமினென்ஸ் என்பது குறித்து ஆராய அமைக்கப்பட்ட, தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளைக் கொண்ட குழு, ஏற்கனவே மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது.


அதைதொடர்ந்து, அண்ணா பல்கலைக் கழகத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ஏற்கப்போவதில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்திருந்தார்.


இந்நிலையில் தமிழக அரசு சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், துணைவேந்தர் சுரப்பா தெரிவித்தது போல் நிதியைத் திரட்ட முடியாது எனவும், கடந்த நிதியாண்டில் அண்ணா பல்கலைக்கழகம் 350 கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி