தமிழகத்தில், வரும், 16ம் தேதி பள்ளிகளை திறக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து, முதல்வர் இன்று(நவ.,12) முடிவை அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பிரச்னையால், ஏழு மாதங்களாக பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டு உள்ளன. வரும், 16ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகளை திறக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும், பெற்றோரின் கருத்துக்களை கேட்ட பின், பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி, கருத்து கேட்பு கூட்டம், தமிழகம் முழுதும், 9ம் தேதி நடந்தது.
பெற்றோரின் கருத்துகள், மாவட்டவாரியாக தொகுக்கப்பட்டு, தமிழக அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை, தலைமைச் செயலர், பள்ளிக் கல்வி, உயர் கல்வி மற்றும் சுகாதாரத் துறைச் செயலர்கள் அடங்கிய குழு பரிசீலனை செய்து, தன் பரிந்துரையை, அரசுக்கு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், வரும், 16ம் தேதி, பள்ளிகளை திறப்பதா, வேண்டாமா என்பதை, முதல்வர் இன்று அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகளை திறக்க, 40 சதவீதத்துக்கு மேற்பட்ட பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், பள்ளி திறப்பை தள்ளி வைக்குமாறு, அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.எனவே, பள்ளி திறப்பு, டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப் போகுமா அல்லது தீபாவளிக்கு பின் திறக்கப்படுமா என, இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
எப்படியும் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்ற செய்தி தான் வரும்..கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகும்..அப்படியிருக்கும் சூழ்நிலையில் எப்போது பள்ளிகளை திறப்பது?... மே மாதம் தேர்தல் வரும் அப்படியிருக்கும் சூழ்நிலையில் பொதுத்தேர்வை மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்..
ReplyDeletePart time teachers ku help panuga
ReplyDeleteநல்லது நடக்கும்
DeletePG-TRB CHEMISTRY
ReplyDeleteOnline classes
Admission going on...
Fully Short cut Methods
Complete syllabus study Materials
Chapterwise Q & A
Online Live doubt clearness sessions
Hand Written Materials
100% result Oriented teaching
Study Material available
What's App
9489147969
KRISHNAGIRI District
அப்படியா?.
DeleteNext calenderyear may be convertedinto school year with vacation during May
ReplyDelete