CPS- திட்டத்தை இரத்து செய்யக்கோரி தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் (EMAIL )அனுப்பும் முகவரி மற்றும் செய்தி ( ENGLISH & TAMIL VERSION ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2020

CPS- திட்டத்தை இரத்து செய்யக்கோரி தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் (EMAIL )அனுப்பும் முகவரி மற்றும் செய்தி ( ENGLISH & TAMIL VERSION )



 CPS நண்பர்களுக்கு வணக்கம்.

 

 CPS திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பும் போராட்டத்தை CPS ஒழிப்பு இயக்கம் அறிவித்துள்ளது தாங்கள் அறிந்ததே.


கீழ்கண்ட செய்தியை தமிழிலும் ஆங்கிலத்திலும் தமிழக முதல்வரின்

 

cmsec@tn.gov.in

 

cmcell@tn.gov.in

 

 என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப ஏதுவாக கொடுக்கப்பட்டுள்ள செய்தியை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் copy செய்து தங்களது மின்னஞ்சலில்  PASTE செய்து முகவரியை மட்டும் TYPE செய்தால் போதுமானது.

 

 மெயிலின் இறுதிப்பகுதியில் தங்கள் உண்மையுள்ள என்பதற்கு கீழே தங்களது பெயரினை பதிவு செய்து அனுப்புமாறு தங்களை கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.



ENGLISH VERSION



Recipient:

      Hon'ble Chief Minister of Tamil Nadu,

Secretariat,

Chennai - 09.

 

Respected sir,

 

Subject: In connection with the cancellation of the new pension scheme and restore old pension scheme.

 

     We would like to draw your attention to the fact that a panel of experts set up to study the cancellation of the new pension scheme being implemented for Tamil Nadu Government employees and teachers has submitted its recommendation report to the Government of Tamil Nadu ending two years with effect from 25.11.20.

 

Our Honourable Former Chief Minister  Dr.J.Jayalalitha assured to restore the old pension scheme in the 2016 assembly election manifestation. The same was proclaimed by her during the Assembly on 19.02.2016.

 

We would be very happy that Honourable Former Chief Minister promise to be implemented. We solemnly request you to the announcement of restoration of the old pension scheme.

 

 

                                                                                      Yours Truly,

 

 

                                                                                   Date: 25.11.2020

 

 

                                                                                                    ********************************************************

TAMIL VERSION



பெறுநர்:

 

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள்,

தலைமை செயலகம்,

சென்னை - 09.

 

அய்யா, வணக்கம்.

 

பொருள் : புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுவது தொடர்பாக.

 

     தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அமல்படுத்தப்பட்டு வரும் புதிய ஒய்வூதிய திட்டத்தை இரத்து செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அதற்கான பரிந்துரை அறிக்கையை தமிழக அரசிடம் அளித்து 25.11.20 அன்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைகிறது என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

 

புதிய ஒய்வூதிய திட்டம் இரத்து செய்யப்படும் என்று மாண்புமிகு முன்னாள்

முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் 19.02.2016 அன்று சட்டமன்றத்திலும்,

 

2016 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியிலும் அறிவித்தார்கள்.

 

முன்னாள் முதலமைச்சரின் அறிவிப்பின் படி புதிய ஒய்வூதிய திட்டத்தை இரத்து செய்து ஆணை வெளியிட ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

                                                                                        தங்கள் உண்மையுள்ள,

 

                                                                                                                     நாள்:25.11.2020

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி