SBI வங்கியில் 8500 பணியிடங்கள் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2020

SBI வங்கியில் 8500 பணியிடங்கள் அறிவிப்பு.



 பாரத ஸ்டேட் வங்கியில் 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அந்தந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்திய பட்டதாரி இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறவும்.


நிறுவனம்: State Bank of India


பணி: Apprentice


காலியிடங்கள்: 8,500


தமிழ்நாடு காலியிங்கள்: 470


உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.15,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,500, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.19,000 வழங்கப்படும்.


தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 31.10.2020 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களை தவிர, மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: https://nsdcindia.org/apprenticeship அல்லது https://apprenticeshipindia.org அல்லது http://bfsissc.com அல்லது https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/ போன்ற ஏதாவதொரு இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2020


மேலும் விரிவான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி