தேசிய அளவிலான மருத்துவக் கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள் மீண்டும் தமிழகத்துக்கு ஒப்படைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 10, 2020

தேசிய அளவிலான மருத்துவக் கலந்தாய்வில் நிரம்பாத இடங்கள் மீண்டும் தமிழகத்துக்கு ஒப்படைப்பு.

 

தேசிய அளவிலான மருத்துவக் கலந்தாய்வில் உள்ள 132 எம்பிபிஎஸ் மற்றும் 19 பல்மருத்துவப் படிப்புக்கான இடங்கள் தமிழ்நாட்டிற்குத் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தேசிய அளவிலான கலந்தாய்வுக்கு 626 எம்பிபிஎஸ் இடங்களும், பல்மருத்துவப் படிப்பில் 29 இடங்களும் ஒதுக்கப்பட்டன. இதில் தேசிய அளவிலான கலந்தாய்வில் நிரப்பப்படாமல் 132 எம்பிபிஎஸ் இடங்களும் 19 பல்மருத்துவப் படிப்பு இடங்களும் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.


அரசு பள்ளியில் பயின்றோருக்கான ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் அதிகம் எனச் சேராமல் போன மாணவர்களுக்குத் தேசிய அளவிலான இடங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டால் வழங்குவதாகத் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி