கடந்த மாதம் பழைய ஊதியம் வழங்கிய நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய மறு சீரமைப்பு: தமிழக அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2020

கடந்த மாதம் பழைய ஊதியம் வழங்கிய நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய மறு சீரமைப்பு: தமிழக அரசு உத்தரவு.

 


அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதிய விகிதத்தில் பொறியாளர்களுக்கு ரூ10 ஆயிரம் முதல் ரூ15 ஆயிரம் வரை ஊதியம் குறைத்து இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் தான் புதிய ஊதிய விகிதம் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், உடனடியாக அதற்கேற்ப அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மாற்றம் செய்து கருவூலத்துறைக்கு பட்டியல் அளித்து இருக்க வேண்டும்.ஆனால், அதை செய்ய தவறியதால் கடந்த நவம்பர் 30ம் தேதி பழைய ஊதியத்தில் சம்பளம் அனைத்து ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிலையில், சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி அனைத்து துறை உயர் அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். 


220 துறைகளை சேர்ந்த 52 பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 1ம் தேதி நவம்பர் முதல் புதிய ஊதிய விகிதத்தில் தான்  சம்பளம் நிர்ணயம் செய்து அனைத்து துறை உயர் அதிகாரிகள் கருவூலத்துறை மற்றும் சம்பளம், கணக்கு அலுவலகத்துக்கு அனுப்ப அறிவுரை வழங்கப்பட்டன. எனினும் புதிய ஊதிய விகிதத்தில் டிசம்பர் மாத ஊதியத்துடன் வழங்கும் வகையில் புதிய ஊதியம் நிர்ணயம் செய்து  டிசம்பர் 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி