வனக் காப்பாளர் தேர்வு தள்ளிவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2020

வனக் காப்பாளர் தேர்வு தள்ளிவைப்பு.

 

வனக் காப்பாளர் பணிக்கான சான்றிதழ் சரி பார்த்தல் மற்றும் உடல் திறன் தேர்வுகள், மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.



இது குறித்து, வன சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்ட அறிவிப்பு:வனத் துறையில், 320 வனக் காப்பாளர் பணிக்கான, 'ஆன்லைன்' தேர்வு, மார்ச்சில் நடந்தது. இதற்கு பிந்தைய நடவடிக்கைகள், கொரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன. கொரோனா பாதிப்பு குறைந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டன.இதன்படி, டிச., 5ல் சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கும் எனவும், உடல் திறன் தேர்வு, டிச., 8ல் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி, இத்தேர்வுகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும், மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி