"அடுத்த கல்வி ஆண்டில் புதிய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும்" மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தகவல்
அடுத்த கல்வியாண்டில் புதியதாக உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும் என, மத்திய உயர்கல்வித் துறை செயலாளார் அமித் கரே தெரிவித்துள்ளார்.
தன்னார்வ தொண்டு அமைப்பின் கருத்தரங்கில் காணொலி வாயிலாக அவர் பங்கேற்றார். அப்போது பேசிய அமித் கரே, பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படவுள்ளது என்றார்.
மேலும், அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், சேர்க்கை பெற பொது நுழைவுத் தேர்வு போன்ற மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனவும் கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி