கல்லுாரிகளில் நேரடி வகுப்பு - உயர் கல்வித்துறை ஆலோசனை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 25, 2020

கல்லுாரிகளில் நேரடி வகுப்பு - உயர் கல்வித்துறை ஆலோசனை!

 

கல்லுாரிகளில் இறுதியாண்டு மட்டுமின்றி, மற்ற மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து, உயர் கல்வித் துறை ஆலோசனை நடத்தியுள்ளது.


தமிழகம் முழுவதும், பள்ளிகள் மட்டும் இன்னும் திறக்கப்படவில்லை. ஒன்பது மாதங்களுக்கு பின், கல்லுாரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன.இந்நிலையில், ஜனவரி முதல் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகளை துவங்கலாமா என்பது குறித்து, கல்லுாரி கல்வி இயக்ககத்தின் மண்டல அதிகாரிகள் தரப்பில், கருத்துக்கள் பெறப்பட்டு, உயர்கல்வி துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.


ஜனவரியில், கல்லுாரிகளை துவங்குவது குறித்து, அறிவிப்பு வெளியாகவிருந்த நிலையில், திடீரென பிரிட்டன் நாட்டில் பரவும், உருமாறிய கொரோனா தொற்றால், முடிவுகள் எடுப்பது தள்ளிப் போயுள்ளது.வரும், 31ம் தேதி வரையிலான நிலவரங்களை ஆய்வு செய்து, சுகாதாரத்துறையின் ஒப்புதல் பெற்று, கல்லுாரிகளை திறக்கலாமா என, உயர் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.


இதுகுறித்து, இம்மாத இறுதியில், உரிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக, உயர் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

3 comments:

  1. ST.XAVIER'S ACADEMY, NAGERCOIL, CELL:8012381919
    PGTRB2021 regular class...
    New Batch starts on: 04-01-2021
    COMMERCE And TNEB Accountant.
    Study materials also available.!
    If you join one time you can study upto getting job.
    அட்மிஷன் நடைபெறும் பாடங்கள்...
    TAMIL.
    ENGLISH.
    MATHEMATICS.
    PHYSICS.
    CHEMISTRY.
    BOTANY.
    ZOOLOGY.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி