யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங் வரும், 7ம் தேதி துவங்குகிறது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், அரும்பாக்கம் அரசு கல்லுாரியில், 60 இடங்கள்; 17 தனியார் கல்லுாரிகளில், 1,053 அரசு ஒதுக்கீட்டு இடங்கள்உள்ளன. அதேபோல, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 557 இடங்கள் உள்ளன.இந்த இடங்களுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களில், 2,002 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். இதற்கான மாணவர் சேர்க்கை, வரும், 7 முதல், 12ம் தேதி வரை, சென்னை அரும்பாக்கம், சித்தா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. முதல் நாள் காலை, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், நண்பகல் முதல், பொது பிரிவு மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறும். மேலும் விபரங்களை, https://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி