"அஞ்சல் தேர்வு தமிழிலும் எழுதலாம்" - மத்திய அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 15, 2021

"அஞ்சல் தேர்வு தமிழிலும் எழுதலாம்" - மத்திய அரசு

 

தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலகம் மற்றும் ரயில் தபால் சேவை கணக்கர் தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டுமே எழுத முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மதுரை எம்.பி. வெங்கடேசன், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். 


அதில், இந்த தேர்வு தமிழில் நடத்தப்படும் என ஏற்கனவே மத்திய அரசு உறுதி தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டி இருந்தார். இந்நிலையில், அஞ்சல் சேவை வாரிய உறுப்பினர் சந்தோஷ் குமார் கமிலா, வெங்கடேசனுக்கு எழுதிய பதில் கடிதத்தில், தமிழிலும் தேர்வு எழுதலாம் என்றும் இதுதொடர்பாக அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அறிக்கை வெளியிட்ட எம்.பி. வெங்கடேசன், தமது கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது என்றும், இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகம் என்றும் முன் நிற்கும் என்றும், இது போட்டியாளர்களுக்கு சமதள ஆடுகளத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி