9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆல்பாஸ் அறிவிப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொருந்துமா? -அதிகாரிகள் விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2021

9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆல்பாஸ் அறிவிப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொருந்துமா? -அதிகாரிகள் விளக்கம்


தமிழகத்தில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என்ற அறிவிப்பு சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு பொருந்தாது.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வெழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொருந்துமா என பெற்றோர் மத்தியில் கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், தமிழக அரசின் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே ஆல்பாஸ் என்ற அறிவிப்பு பொருந்தும் என்றும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொருந்தாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆகையால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் படியும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி