மாணவர்களின் ஆளுமைத்திறனை வளர்க்க திறனறிப் போட்டிகள் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2021

மாணவர்களின் ஆளுமைத்திறனை வளர்க்க திறனறிப் போட்டிகள் அறிவிப்பு.


மத்திய திட்ட ஏற்பளிப்புக்குழு கூட்ட நடவடிக்கை ஒப்புதலின் Quality Intervention ( Secondary ) என்ற தலைப்பின் கீழ் அரசு பள்ளிகளில் இடைநிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்க்க நடவடிக்கை எடுக்கும் வகையில் Talent Search at School Level ( SI.No : 73.f ) எனும் செயல்பாட்டின் மூலம் திறனறிப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இச்செயல்பாட்டின் நோக்கம் , மாணவர்கள் பாடப்புத்தங்களைத் தாண்டி , தங்களது பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும் , புதிய மற்றும் மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கவும் , ஆழமான விவாதம் செய்யக்கூடிய சூழல் மற்றும் குழுமனப்பான்மையை உருவாக்கவும் , மாணவர்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் , மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்க்க நடவடிக்கை எடுக்கும் வகையிலும் திறனறிப் போட்டிகளை நடத்தி அதன் மூலம் வெற்றி பெறும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் ( NTSE , TRUST ) பங்கு பெற்று பயன்பெறச் செய்வதாகும் . அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 , 10 மற்றும் 11 , 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என தனித்தனியாக கட்டுரை எழுதுதல் / பேச்சுப் போட்டி போன்ற திறனறிப் போட்டிகளை மாணவர்களுக்கு கல்வி மாவட்டம் மற்றும் மாவட்ட அளவில் நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.


Talent Search at School Level. - Dir Proceedings - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி