வருமான வரி தாக்கல் இன்றே கடைசி நாள்... தவறினால் அபராதம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2021

வருமான வரி தாக்கல் இன்றே கடைசி நாள்... தவறினால் அபராதம்?


கணக்குத் தணிக்கை தேவைப்படும் கணக்குகளுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் ஆகும். தவறுவோருக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது.


ஒவ்வொரு நிதியாண்டிலும் மாத ஊதியம் பெறுவோர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31ம் தேதி நிறைவடையும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக 2019-2020 நிதியாண்டில், வருமான வரித் தாக்கல் செய்வதற்கான அவகசாம் அடுத்தடுத்து நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. இறுதியாக தனி நபர்களுக்கு ஜனவரி 10ம் தேதி வரை கெடு அளிக்கப்பட்டது.


கணக்குத் தணிக்கையாளர்கள் மூலம் தணிக்கை செய்யப்படும் கணக்குகளுக்கு பிப்ரவரி 15-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அவகாசத்தை மேலும் நீட்டிக்க எழுந்த கோரிக்கைகளை நிராகரித்த மத்திய நிதியமைச்சகம், கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என தெரிவித்தது.


அதன்படி, கடைசி நாளான இன்று வருமான வரி தாக்கல் செய்ய தவறுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஜனவரி 10-ம் தேதி வரை 2019-20ஆம் நிதியாண்டிற்கு, 4 கோடியே 95 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.. இது கடந்த நிதியாண்டோடு ஒப்பிடும்போது 5 சதவிகிதம் அதிகம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1 comment:

  1. PG TRB 2021

    ALL SUBJECTS COACHING

     

    Each Subject Handling By 3 Efficient Faculties

    contact:9976986679, 6380727953

    Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

     

    ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & C.S.

     

    இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

     

    REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

    Hostel Available

     

    For Admission:9976986679, 6380727953

    Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

     

    ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி