தமிழாசிரியருக்கு சிலை மாணவர்கள் அசத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2021

தமிழாசிரியருக்கு சிலை மாணவர்கள் அசத்தல்

 

மறைந்த தமிழாசிரியருக்கு, முன்னாள் மாணவர்கள், 12 லட்சம் ரூபாய் செலவில் சிலை திறந்து, நன்றிக்கடன் செலுத்தி உள்ளனர். 


தஞ்சாவூர் தமிழ்வேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக் கல்லுாரியின், தமிழ்த் துறை முன்னாள் பேராசிரியர் மற்றும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லுாரி நிறுவனர் விருத்தாசலனார்.இவர், சென்னை பல்கலையில், 'லட்சினையில் கற்றனைத்துாறும் அறிவும் ஆற்றலும்' என்ற தமிழ்த்தொடரை இடம் பெற செய்தவர். சென்னை பல்கலை, பாரதிதாசன் பல்கலையில், ஆட்சிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில், 30 ஆண்டு காலம் பணியாற்றினார். தமிழ் மொழி வளர்ச்சிக்கும், மாணவர் நலனுக்கும் பாடுபட்டு, தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். 


தமிழறிஞர் விருத்தாசலனாரின் நினைவைப் போற்றும் வகையில், அவரிடம் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து, சிலை வைக்க தீர்மானித்தனர்.இதன்படி, 12 லட்சம் ரூபாய் செலவில், வெண்கலத்தில் செய்யப்பட்ட விருத்தாசலனார் முழு உருவச் சிலையை, நாட்டார் திருவருட் கல்லுாரி வளாகத்தில் நிறுவியுள்ளனர். முன்னாள் மாணவர்களின் இந்த செயல், அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

2 comments:

  1. முன்னுதாரணம் இதுதான்.....வளரட்டும் புதிய தலைமுறை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி