GO NO : 15 , DATE : 01.02.2021
12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.7,700 லிருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாநிலத் திட்ட இயக்குநரின் கருத்துருவை ஏற்று , மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணை மூலம் அரசுப் பள்ளிகளில் கல்விசார் ( உடற்கல்வி , ஓவியம் , இசை மற்றும் வாழ்க்கைக் கல்வி ) இணைச் செயல்பாடுகளைப் பயிற்றுவிக்கும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட 16,549 பகுதி நேரப் பயிற்றுநர் பணியிடங்களில் தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேரப் பயிற்றுநர்கள் , அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர்களின் கல்விசார் இணைச் செயல்பாடுகளைச் சிறக்க செய்து வருவதினால் , அவர்களது பணித்திறனை மேலும் மேம்படுத்தும் பொருட்டு மேற்கண்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள இதர வழிமுறைகளுடன் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு இவர்களது மாத ஊதியத்தினை ( மே மாதம் நீங்கலாக 11 மாதங்களுக்கு மட்டும் ) ரூ .7,700 / -லிருந்து ரூ .10,000 / - ஆக ( ரூபாய் பத்தாயிரம் மட்டும் ) உயர்த்தி வழங்க முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி