9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2021

9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

 


கடந்த 2011 ஜனவரி 1-ம் தேதிக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்களை நகர்புற ஊரமைப்புத் துறையின் முறையான அனுமதி பெற்று வரைமுறைப்படுத்திக்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் `கோவிட் தொற்றுக்குப் பிந்தைய உலகத்துக்கு கல்வி நிறுவனங்களை தயார்படுத்துதல்' குறித்த கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றன. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, சுயநிதி நிபுணத்துவ கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு, அகில இந்திய சுயநிதி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு, சிபிஎஸ்இ ஸ்கூல்ஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன், தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கம் ஆகியவை சார்பில் இவ்விழா நடைபெற்றது.


விழாவின்போது வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

9, 10, 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் முழு ஆண்டு தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இது உயர் படிப்புகளுக்கு மாணவர்கள் போட்டியிடும் மனப்பான்மையை பாதிக்கும். எனவே இந்த முடிவை மறுபரிசீலனை செய்து மாற்று அறிவிப்பை முதல்வர் வெளியிட வேண்டும்.

ஏற்கெனவே பள்ளிகள் நிதிச்சுமையால் தவித்துவரும் நிலையில், இந்த அறிவிப்பால் மாணவர்கள் நிலுவையில் உள்ள கல்விக் கட்டணத்தை முழுவதுமாக செலுத்த முன்வர மாட்டார்கள். இதனால் பள்ளிகள் மேலும் பல பாதிப்புகளை சந்திக்கும். தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க ஆலோசனை குழுக்களை அமைத்து அதில் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்புக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.

தனியார் பள்ளி ஆசிரியர்களின் முன்னேற்றத்துக்காக தனியாக வாரியம் அமைக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணத்திலிருந்து ஆண்டுக்கு 15 சதவீதம் உயர்த்தி அடுத்த 3 ஆண்டுகளுக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். பள்ளிகள் செலுத்த வேண்டிய சொத்து வரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் டி.சி.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. அரசு தேர்வை நடத்த முன்வர வேண்டும்

    ReplyDelete
  2. PG TRB 2021
    ALL SUBJECTS COACHING

    Each Subject Handling By 3 Efficient Faculties

    contact:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

    ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Science

    இந்த பயிற்சியின் மூலம், தேர்வுக்குரியர் ஒரு ஆர்வலராக அல்ல. ஆனால் பொறுப்பான ஆசிரியராக.

    REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST BATCHES

    Hostel Available
    For Admission:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE-1.

    ALL THE BEST TO OUR TEACHER ASPIRANTS.

    ReplyDelete
  3. பி.எட் படித்தவர்கள், டி.டி.எட் படித்தவர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சீனியாரிட்டியில் தேர்வாகியும் வேலை மறுக்கப்பட்டவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், பாலிடெக்னிக் முறைகேட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என லட்சக்கணக்கானோர் இந்த ஆட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, போராடி... நொந்து .... அதனையும் மீறி 40 வயதிற்கும் மேல் ஆசிரியர் பணி இல்லை என்ற அறிவிப்பால் விரக்தியானோர்.... தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் 7 ஆண்டுகளைக் கொடுமையாக கடந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களால் மாறப்போகும் குடும்பங்கள் என பாதிக்கப்படடவர்களால் நிச்சயம் இதற்குக் காரணமானவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டால் படித்ததற்கு என்ன பிரயோஜனம்? அதனை இந்த ஆட்சி பணியிடங்களைக் குறைத்து வஞ்சித்துள்ளது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி