M.Phil , Ph.D ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு : பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2021

M.Phil , Ph.D ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு : பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு.

 


எம்ஃபில், பிஎச்டி ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க டிச.31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதையடுத்து பிஎச்டி, எம்ஃபில் போன்ற ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க ஜூன் 30-ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் அவகாசம் தரவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவித்தது.


அதையேற்று ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசத்தை அனைத்து பல்கலைக்கழகங்களும் நீட்டித்தன. எனினும், தொற்றின் தீவிரம் தணியாததால் ஆய்வறிக்கையை இறுதி செய்ய முடியாத நிலை நீடிப்பதாக யுஜிசிக்கு மாணவர்கள் பலர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து எம்ஃபில், பிஎச்டி மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து யுஜிசி செயலர் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பில், ‘‘கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு எம்ஃபில், பிஎச்டி மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. தொற்று பரவல் முழுமையாக விலகாத நிலையில், ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, எம்ஃபில், பிஎச்டி மாணவர்கள் டிச.31-ம் தேதி வரை தங்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கலாம். அதற்கான அனுமதியை உயர்கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி