18 வயதுக்கு மேல் தடுப்பூசி முன்பதிவு இன்று துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2021

18 வயதுக்கு மேல் தடுப்பூசி முன்பதிவு இன்று துவக்கம்

நாடு முழுதும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.


கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.



தற்போது, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மே, 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.



'அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளும் போது, சமூக நோய் எதிர்ப்பாற்றால் உருவாகி, தொற்றை கட்டுப்படுத்த முடியும்' என, டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், தடுப்பூசி போட்டுக் கொள்ள, இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என, அரசு அறிவித்துள்ளது.

இதற்கு, https://www.cowin.gov.in என்ற, இணையதளத்திற்குள் சென்று, 'ரிஜிஸ்டர் மை செல்ப்' என்பதை அழுத்த வேண்டும். பின், மொபைல் போன் எண் பதிவு செய்து, பெயர், வயது உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.ஆதார் எண் உள்ளிட்ட, அரசு அங்கீகரித்த அடையாள அட்டை எண்ணை பதிந்து, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி