2 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் இணைப்புப் பாடம் கற்பித்தல் ஒளிபரப்பு தொடக்கம்: மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2021

2 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சியில் இணைப்புப் பாடம் கற்பித்தல் ஒளிபரப்பு தொடக்கம்: மே 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.

 


கல்வித் தொலைக்காட்சியில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இணைப்புப் பாடம்  கற்பித்தல் வகுப்பு நேற்று தொடங்கியது. இப்பயிற்சி வகுப்பு மே 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல்- கற்பித்தல் இடைவெளியை சரி செய்யும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இணைப்புப் பாட கையேடும் (Bridge Course Material), 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி புத்தகமும் (Work Book) கல்வித் துறையால் வழங்கப் பட்டுள்ளது.


தொடர்ந்து, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலரின் அறிவுரையின்படி, மாணவர்கள்  பயன்பெறும் வகையில் முதல்கட்டமாக ஏப்.22-ம் தேதி(நேற்று) முதல் மே 10-ம் தேதி வரைஇணைப்புப் பாடம் கற்பித்தல்வகுப்பு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு  செய்யப்படவுள் ளது. வகுப்பு, நேரம் என்ற அடிப்படையில் விவரம்:

9-ம் வகுப்பு- காலை 8- 8,30, பிற்பகல் 12- 12.30

8-ம் வகுப்பு- காலை 8.30- 9, பிற்பகல் 12.30- 1

7-ம் வகுப்பு- காலை 9- 9.30, பிற்பகல் 1.30- 2

6-ம் வகுப்பு- காலை 9.30- 10, பிற்பகல் 2- 2.30

5-ம் வகுப்பு- காலை 10- 10.30, பிற்பகல் 2.30- 3

4-ம் வகுப்பு- காலை 10.30- 11, பிற்பகல் 3- 3.30

3-ம் வகுப்பு- காலை 11- 11.30, பிற்பகல் 3.30- மாலை 4

2-ம் வகுப்பு- காலை 11.30- 12, மாலை 4- 4.30

இணைப்புப் பாடம் கற்பித்தல் வகுப்பு ஒளிபரப்பு மே 10-ம் தேதி முடிவடைந்தவுடன், பயிற்சி புத்தகத்துக்கான காணொலிகள் ஒளிபரப்பு செய்யப்படும்.

மே 10-ம் தேதி வரை இணைப்புப் பாடம்  கற்பித்தல் வகுப்பு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு  செய்யப்படவுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி