ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்.... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 8, 2021

ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு விரைவில்....


அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு , பணி மாறுதல் கலந்தாய்வு ஆண்டு தோறும் மே மாதத்தில் நடத்தப்படும். ஆனால் , கரோனா பரவலால் நிகழ் கல்வியாண்டில் கலந்தாய்வு நடத்துவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு கடந்த ஜனவரி இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து , ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. 


ஆனால் , பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகிவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சில ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அதன் விசாரணையில் பொதுமாறுதல் , பதவி உயர்வு கலந்தாய்வு ஆகிய இரண்டையும் சேர்த்து நடத்த பள்ளிக் கல்வித் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் , ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை மே மாதம் நடத்தப்படவுள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

4 comments:

  1. PG TRB 2021
    ALL SUBJECTS COACHING
    And TEST SERIES BATCH

    contact:9976986679, 6380727953
    Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

    ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Instructor

    REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST Series BATCHES

    Model classes recorded videos YouTube link:
    Press link please
    https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

    Hostel Available
    For Admission:9976986679, 6380727953
    Magic Plus Coaching Centre, ERODE-1.

    ReplyDelete
  2. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  3. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete
  4. வெளிப்படையான கலந்தாய்வு நடைபெற அரசு உதவி செய்ய வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி