Flash News : தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2021

Flash News : தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு.

 


* தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி முதல் இரவு நேரம் ( 10 மணி முதல் 4 மணி வரை)  ஊரடங்கு அறிவிப்பு.


* ஞாயிறு முழு ஊரடங்கு அமல்


இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அத்தியாவசிய பணிகள், மருத்துவம், ஊடகம் மாதிரியான துறையினருக்கும் இந்த ஊரடங்கு பொருந்தாது என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. 


அதுமட்டுமல்லாது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


வரும் 20-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இரவுநேர ஊரடங்கின்போது போக்குவரத்துக்கு தடை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நாட்களில் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி எனவும் அரசு தெரிவித்துள்ளது. இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Hey friend, it is very well written article, thank you for the valuable and useful information you provide in this post. Keep up the good work! FYI, please check these depression, stress and anxiety related articles:

    Google Search Consoles

    Slow Cooker Taco Soup

    Oven Roasted Asparagus

    Slow Cooker Creamy Potato Soup

    Private Job Kaise Paaye

    How to Get Job in Microsoft

    How to Get Job in Canada

    How to Get Jobs at USA


    You can also contact me at www.jobsada.com@gmail.com for link exchange, article exchange or for advertisement.

    Thanks a lot

    Vikas ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி