தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2021

தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

 


தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.


சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜிராம் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.


கூடுதலாக மருத்துவ பணியாளர்களை நியமிக்கவும், செங்கல்பட்டிலுள்ள ஒருங்கிணைந்த தடுப்பு மருந்து மையத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கவும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.


மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போக்குவரத்தை நிறுத்தவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி