ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான அரசு பள்ளி மாணவர்களில், 10 பேருக்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராக நியமித்து, ஆன்லைன் வகுப்பு நடத்த உத்தரவிடப் பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ளதால், முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பள்ளிகள், கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனா தீவிரம் குறைந்த பின், பிளஸ் 2 தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா என, முடிவு செய்ய திட்டமிடப் பட்டு உள்ளது. இந்நிலையில், ஆல் பாஸ் செய்யப்பட்ட மாணவர்களுக்கு தினசரி கற்றல் பயிற்சி வழங்க, ஆசிரியர்களை பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் அறிவுறுத்தி உள்ளார். ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, அரசு பள்ளி மாணவர்களில், 10 பேருக்கு ஒரு ஆசிரியர் என, பொறுப்பாளராக நியமித்து, ஆன்லைனில் கற்றல் பயிற்சி வழங்க வேண்டும் என, ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
இதன்படி, தினசரி பாட பயிற்சிகள், செய்முறைகள் போன்றவற்றை வழங்கி, அவற்றை மதிப்பிட்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தவும், ஆசிரியர்கள் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி